வியாழன், 1 ஜனவரி, 2026

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கனடா - பிரதமர் மார்க் கார்னி

இன்று கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது. 

புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவு 
கூருகிறோம். 
இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது. 
நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம். அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. 
இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும் 2026ம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம். புத்தாண்டு நல்வாழ்த்துகள் கனடா என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





.



 

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

.நாட்டில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல்
 நடைமுறைக்கு வருகிறது.
 முன்னதாக, உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. 
 குறித்த அறிவிப்பை மீறி செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை
 தெரிவித்திருந்தார். 
 லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய காகிதம் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நல்லூரில் இன்று புத்தாண்டை முன்னிட்டு விசேட வழிபாடுகள்

இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
 இதேவேளை மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் 
முன்னெடுக்கப்பட்டன.
 ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்களின் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
 இதன்போது நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதுவருட ஆசிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




கடல் உணவு இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய திருட்டு

நியூ இங்கிலாந்து கடந்த சில வாரங்களாக நியூ இங்கிலாந்து பகுதியில் கடல் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சுமார் 40,000 சிப்பிகள், நண்டு இறைச்சிகள் $400,000 மதிப்புடைய லாப்ஸ்டர்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22ம் திகதி மைனே மாகாணத்தின் பால்மவுத் பகுதியில் இந்த திருட்டு சம்பவம் தொடங்கியுள்ளது. காஸ்கோ பே பகுதியில் பண்ணையில் விற்பனைக்காக 14 கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் மாசசூசெட்டின் டான்டன் பகுதியிலும் இரண்டு பெரிய திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) சொத்துக்களை 06 நிறுவனங்களுக்கு மாற்ற காலக்கெடு

 இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) சொத்துக்களை புதிதாக நிறுவப்பட்ட ஆறு நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்முறை பிப்ரவரி 1, 2026 க்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால CEB க்கு
 அறிவித்துள்ளார்.
பேராசிரியர் ஹேமபால CEB பொது மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக தொடர்புடைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் ஆறு நிறுவனங்களின் கீழ் இதை செயல்படுத்த CEB திட்டமிட்டுள்ளது. 
 அதன்படி, CEB க்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையாக அந்தந்த நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. 
 இதற்கிடையில், புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மாற்ற விரும்பாதவர்கள் தன்னார்வ ஓய்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் 
வழங்கப்பட்டுள்ளது. 
 இதன் விளைவாக, மொத்தம் 2,173 ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதை முடிக்க எரிசக்தி அமைச்சகம் CEB க்கு அறிவுறுத்தியுள்ளது. 
 மறுசீரமைப்பு செயல்முறை முடிந்ததும், இலங்கை மின்சார வாரியம் கலைக்கப்படும், மேலும் அதன் செயல்பாடுகள் ஆறு புதிய நிறுவனங்களின் கீழ் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.