ஞாயிறு, 8 அக்டோபர், 2023

கட்டுவானில் பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு முரண்பாடு மூன்று மோட்டார் சைக்கிள் தீக்கிரை

  யாழில்  இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 
யாழ் கட்டுவான் பகுதியில் 06-10-2023.அன்று  
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது 
இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார். அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக
 வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , 
அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் நின்ற இரு மோட்டார் சைக்கிளையும் வன்முறை கும்பல் 
தீக்கிரையாக்கி உள்ளது.
குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி 
விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் 
வன்முறை கும்பலை 
துரத்திய போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு 
மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர். அதனை வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளனர். 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.