வியாழன், 19 அக்டோபர், 2023

நாட்டில் கொத்மலை கிராம மக்களை பயமுறுத்தும் குரல் பேராசிரியர் தகவல்

கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்ட அசாதாரண குரல் தொடர்பில் இன்று விசேட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
 பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் 
அதுல சேனாரத்ன இன்று அப்பகுதியை பார்வையிட்டதன் பின்னர் இந்த தகவலை வெளியிட்டார்.
 கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்கும் அசாதாரண ஒலியானது பூமியின் ஓட்டையினூடாக நீர் செல்வதால் ஏற்படும் சத்தம் என பேராசிரியர் தெரிவித்தார்.
 இது ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லை என்று பேராசிரியர் மேலும் கூறினார்.
 நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் கடந்த 14 ஆம் திகதி முதல் கொத்மலை வெத்தலாவ விளையாட்டு மைதானத்திற்குள்
 இருந்து கிராம மக்கள் அசாதாரண சத்தம் கேட்டு 
வருகின்றனர்.
 கிராம மக்களை பயமுறுத்தும் இந்த குரல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 இவ்வாறானதொரு பின்னணியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் திரு.அதுல சேனாரத்ன இன்று தாமாக முன்வந்து அப்பகுதிக்கு வந்து உரிய இடத்தை அவதானித்தார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.