ஞாயிறு, 5 மார்ச், 2023

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் கைது

சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் இன்றையதினம் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை கிளிநொச்சியில் இருந்து எடுத்து வந்தவேளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை.05-03-2023. இன்றையதினம் 
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.