சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் இன்றையதினம் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை கிளிநொச்சியில் இருந்து எடுத்து வந்தவேளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை.05-03-2023. இன்றையதினம்
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக