வியாழன், 16 மார்ச், 2023

தலைநகர் பாரிஸ்சில் குவிந்த குப்பைகளால் குறைக்கூறும் சுற்றுலாப்பயணிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் 
கனவாக இருக்கலாம்.
ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன. பிரான்ஸில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறை கூறுகின்றனர். இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.