புதன், 15 மார்ச், 2023

டெல்லி பொலிஸ் சைபர் குற்றங்களைத் தடுக்க ட்ரூகோலர் செயலியுடன் ஒப்பந்தம்

 

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகோலர் செயலி’ நிறுவனத்துடன் இந்தியாவிலுள்ள டில்லி பொலிஸ்
 ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து டில்லி பொலிஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகோலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகொலர் செயலியுடன் டெல்லி பொலிஸ் ஒப்பந்தம் 
செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக புகார்களை பெற்ற டில்லி பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகோலர் 
செயலி காண்பிக்கும்.
எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க இலட்சிணையும் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.