வெள்ளி, 17 மார்ச், 2023

குலபடா கிராமத்தில் தலை மற்றும் வாயின்றி பிறந்த விசித்திரக் குழந்தை;

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை 
ஒன்று பிறந்துள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் 
காணப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியால் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் வாகனத்திலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. சுடாமணி பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்போது தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.