செவ்வாய், 21 மார்ச், 2023

பரிசில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! - 140 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைத் அடுத்து, வரும் வியாழக்கிழமை பரிசில் 140 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து, பரிசில் உள்ல 645 ஆரம்ப பாடசாலைகளில் 140 பாடசாலைகள் மூடப்படுகின்றன. 70 வீதமான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலை நிறுத்தத்தோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பகல் 2 மணி அளவில் Place de la Bastille பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றினைய 
தீர்மானித்துள்ளனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.