ஞாயிறு, 12 மார்ச், 2023

கொரோனா மீண்டும் பரவும்அபாயம்: எதனால் தெரியுமாஆராய்ச்சியில் அதிர்ச்சி

அமெரிக்கா - நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் 3 விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரோன் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் கழிவுநீர் பாதையிலுள்ள எலிகளுக்கு இந்த வகை கொரானா வைரஸ் வர வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
உயிரியலாளர்கள் 79 எலிகளில் 13க்கு நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்துள்ளனர். எங்கள் கண்டுபிடிப்புகள் எலி மக்கள் தொகையில் SARS-CoV-2 ஐ மேலும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைக் 
கூறுகின்றன,
வைரஸ் விலங்குகளில் புழக்கத்தில் உள்ளதா மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக உருவாகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம் என மருத்துவர் 
வான் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, இந்த இடத்தில் எங்கள் ஆராய்ச்சி மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்களில் விலங்குகள் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, எனவே மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று
 தெரிவித்துள்ளார்.
எனவே இதன் மூலம் பொதுமக்களுக்கு எலிகள் மூலம் கொரானா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என இந்த ஆராய்ச்சி
 தெரிவிக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.