புதன், 2 செப்டம்பர், 2020

போனஸ் பணத்தை கோரி கொத்மலை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

வழமையாக ஏப்ரல் மாதம் வரும் போனஸ் பணத்தை இவ்வருடம் வழங்கவில்லை என தெரிவித்து நுவரெலியா – கொத்மலை வீ.டி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 02-09-2020. அன்று 
.போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,
“காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு 
மாலை 6 மணிக்கு வீடுகளுக்கு செல்கின்றோம். இடையில் ஆடைத் தொழிற்சாலையில் சொல்லிலடங்கா கஸ்டத்தை அனுபவித்து 
வேலை செய்கின்றோம்.
சம்பளம் குறைவாக காணப்பட்டாலும் பொருளாதார சிக்கலால் வேலை பார்கின்றோம். நாங்கள் கஸ்டப்பட்டு வேலைப்பார்த்து வருடத்தில் மிஞ்சுவது இந்த போனஸ் பணம் மட்டும் தான்.
அதையும் இம்முறை தரமுடியாது என நிர்வாகத்தினர் கூறுகின்றனர். போனஸ் பணத்தை தரும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.