புதன், 2 செப்டம்பர், 2020

இராணுவம் யாழ்.பொம்மைவெளியில் திடீர் சுற்றி வளைப்பு.

 

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பொம்மைவெளிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த சுற்றிவளைப்பு.01-09-2020. அன்று  காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த 
சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் பொலிஸ் மற்றும் கஞ்சா ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன.சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் 
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ்
 விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிககைளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.