வியாழன், 24 நவம்பர், 2022

யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் சரண்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின்
 தந்தை 24-11-2022.இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஒஸ்மானியா கல்லூரிக்குள்.23-11-2022. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் 
பிரகாரம் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன் , சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும்
 முன்னெடுத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். அதேவேளை , சந்தேக நபரை கைது செய்யவேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் இன்றைய தினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்து இருந்தார்கள் என்பது 
குறிப்பிடத்தக்கது






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.