கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர்.
மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு
திரும்பியது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைத . என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக