பிரிட்டனில் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமாரன், ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நாடாளுமன்ற இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற வரலாற்றில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் இலங்கைத் தமிழ் நபர் இவரே ஆவார்.
தனது புதிய நியமனம் குறித்த சமூக ஊடகப் பதிவில், உலகளாவிய அமைதியின்மை மற்றும் சவால்கள் நிறைந்த இக்காலத்தில், சர்வதேசத் தலைமை மற்றும் வெளியுறவு விவகாரங்களில் ஐக்கிய ராச்சியத்திற்குச் சேவை செய்வது பெரும் கௌரவம் என்று
உமா குமாரன் கூறியுள்ளார்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர், இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து அகதிகளாக பிரிட்டனுக்கு வந்தனர். அப்போதைய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெர்மி கோர்பினின் மத்தியஸ்தத்தின் மூலம் அவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை
வழங்கப்பட்டது.
இவர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக