.மிகவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (ஆடி மாதம்) கொடியேற்றத்துடன் கோலாகலமாக
ஆரம்பமாகவுள்ளது.
திருவிழாக் காலத்தில் நாட்டின் நாலாதிசைகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (MOH Office) இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
திருவிழாக் காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பின்வரும் அத்தியாவசியப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது: பக்தர்களுக்கான தூய்மையான குடிநீர் விநியோகம் மற்றும் தற்காலிக மலசலகூட வசதிகள்.
ஆலய சூழலில் விசேட சுகாதார மற்றும் துப்புரவுப் பணிகள் (சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பு). போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள் (Parking). தற்காலிக வியாபாரக் கடைகளை முறைப்படுத்துதல் மற்றும் அன்னதான விநியோகக் கண்காணிப்பு.
இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதிநிதிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக