சனி, 9 மே, 2026

இலங்கையில் விசேட அறிவிப்பு - 18 சதவீதத்தால் உயரும் மின் கட்டணம்

நாட்டில் மின் கட்டண உயர்விற்கு  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL)  அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் மின் கட்டணமானது 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 
இக் கட்டண உயர்வானது 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது. 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது
 என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இதன்படி இந்த விலை உயர்வு மொத்த நுகர்வோர் தளத்தில் சுமார் 5 சதவீதமானோரை  மட்டுமே பாதிக்கும் என்றும், இதன்மூலம் 95 சதவீதமான  மக்கள் அதிக செலவுகளிலிருந்து திறம்பட பாதுகாக்கப்படுவார்கள் என்றும் PUCSL உறுதிப்படுத்தியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.