யாழ் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக,
அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு
நிறுத்தப்பட்டுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ
இது குறித்துத் தெரிவிக்கையில், மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகக்
குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வகைப்படுத்தல் செயல்பாட்டில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைச்
சரி செய்ய ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வழங்கிய தகவலின்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 'கஷ்டப் பிரதேச' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்:
நெடுந்தீவு: 8 பாடசாலைகளைச் சேர்ந்த 92 ஆசிரியர்கள்.
நயினாதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள்.
அனலைதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள்.
எழுவைதீவு: 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள்.
இதேவேளை தேசிய பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலையான கொடுப்பனவு 12,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அளவு அல்லது மாணவர் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் சமமாக 25,000 ரூபா
வழங்கப்படவுள்ளது.
ஒரு மாதத்தின் மின்சாரக் கட்டணம் இந்தத் தொகையைத் தாண்டும் பட்சத்தில், எஞ்சிய தொகையை அந்தந்த பாடசாலைகளே சுயமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக பாடசாலைகள் பெரும் நெருக்கடியைச் சந்திப்பதாகவும், முன்பு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக