புதன், 15 ஏப்ரல், 2026

விசேட செய்தி: கொழும்பு திரும்புவோருக்கு இன்று முதல் கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்கள்

சொந்த ஊர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்காக  சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, 15-04-2026.இன்று.முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 
அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக
 பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால் இந்தத் தற்காலிக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.