செவ்வாய், 31 அக்டோபர், 2023

நாட்டில் ஆசிரியர்களால் சீரழிக்கப்படும் மாணவிகள். தண்டனையை கடும் தொனியில் நீதிபதி இளம்செழியன் வழங்கிய கூற்று

 இலங்கை அதிபர்களே ஆசிரியர்களே18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை நாம் கவனமாக பார்க்க வேண்டும் உங்களை நம்பித் தானே தங்களது பிள்ளைகளை பாடாலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் தங்கள் கடமைகளை விட்டிலே புரிகிறார்கள்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கிறாள் ஒழுக்கத்துடன் வளர்கிறாள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்கின்றனர் . நம்பிக்கையை...

திங்கள், 30 அக்டோபர், 2023

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேறி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, பிங்கிரிய, பல்லம மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்...

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய வரி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும்...

சனி, 28 அக்டோபர், 2023

நாட்டில் உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு: கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு கால அவகாசம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இது தொடர்பான மனு நேற்று (27) முர்து...

வெள்ளி, 27 அக்டோபர், 2023

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது   இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

வியாழன், 26 அக்டோபர், 2023

ஏர் இந்தியா விமான சேவைகள் ஹமாஸ் இஸ்ரேல் போர் எதிரொலியால் ரத்து

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி.26-10-2023. இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.இந்நிலையில்,...

புதன், 25 அக்டோபர், 2023

பிரித்தானிய வெளிநாட்டவரின் விசாக்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து யூத-விரோத நடத்தை அல்லது கருத்துக்களுக்காக குறிப்பிட்ட வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  யூத-விரோத நடத்தை காரணமாக அவர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான விசாவை ரத்து செய்ய அரசாங்கம் விரும்புவதாக உள்துறை அலுவலக அதிகாரிகள்...

செவ்வாய், 24 அக்டோபர், 2023

சீன நிறுவனம் யாழ்ப்பாணத்தில் வர்த்தக வியாபாரத்தினை விஸ்தரித்துள்ளது

சீன நிறுவனமான சைனோபெக் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில்.24-10-2023. இன்று செவ்வாய்கிழமை  மானிப்பாய் மெமோறியல் வீதியில் சைனோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.  கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது...

திங்கள், 23 அக்டோபர், 2023

நாட்டில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை

நாட்டில் கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி...

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்

நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவில் 21-10-2023.,அன்று  நடைபெற்றது.  குறித்த...

சனி, 21 அக்டோபர், 2023

நாட்டில் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை சட்டத்தில் இடமில்லை...

வெள்ளி, 20 அக்டோபர், 2023

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா விவகாரம் அரச ஊடகங்கள் குறிப்பிடும் CID அறிக்கை முழுமையானதா

இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் இலங்கை அரசின் அச்சு ஊடகங்களான தினகரன் மற்றும் தினமின செய்தி வெளியிட்டிருந்தன. குற்றபு்...

வியாழன், 19 அக்டோபர், 2023

நாட்டில் கொத்மலை கிராம மக்களை பயமுறுத்தும் குரல் பேராசிரியர் தகவல்

கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்ட அசாதாரண குரல் தொடர்பில் இன்று விசேட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன இன்று அப்பகுதியை பார்வையிட்டதன் பின்னர் இந்த தகவலை வெளியிட்டார். கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்கும் அசாதாரண ஒலியானது பூமியின் ஓட்டையினூடாக நீர் செல்வதால்...

புதன், 18 அக்டோபர், 2023

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாப்த்தி எட்டு விமானங்கள் ரத்து

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள்...

செவ்வாய், 17 அக்டோபர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஆபத்து பகுதிகளை கண்டறிய ஆய்வு

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படும் ஏனைய இடங்களைக் கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்கும் செயற்திட்டத்தின் ஊடாக அபாயகரமான...

திங்கள், 16 அக்டோபர், 2023

நாட்டில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

நாட்டில்அடுத்த மாதம் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.* பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நாட்டில் ஆறு அரச வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டம்

நாட்டில் ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச  வங்கி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.  இதன்படி, தற்போதைய அரச ...

சனி, 14 அக்டோபர், 2023

ஆனையிரவு,பகுதியில் ரயிலில் மோதி கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிரவு,பகுதியில். 13-10-2023.அன்று யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக கடுகதியில் மோதிண்டு 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம்...

வெள்ளி, 13 அக்டோபர், 2023

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்

யாழில்  இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் , உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அவ்வாறு...

வியாழன், 12 அக்டோபர், 2023

நாட்டில் நைனாமடு பகுதியில் முதல் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்ட அரியவகை மீன் இனம்

இலங்கையில் முதன்முறையக அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது. புத்தளம், நைனாமடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் குறித்த அரியவகை மீன் சிக்கியுள்ளது. இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும், துறைமுகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். முயல் மீன் என அழைக்கப்படும்...

புதன், 11 அக்டோபர், 2023

பாிஸில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது

பிரான்ஸின் பாிஸில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு Place de La République சதுக்கத்தில் இருந்து இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும்...
Blogger இயக்குவது.