சனி, 17 செப்டம்பர், 2022

நாட்டில் அரிசியில் அலுவலகம் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி செய்தி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம் 0.1 சதவீதம், செலினியம் 0.3 சதவீதம் உள்ளடங்குகின்றது. இவை அனைத்தும் கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 சதவீதம் ஈயம், 26 சதவீதம் காட்மியம், 20 சதவீதம் பாதரசம், 47 சதவீதம் செலினியம் இருப்பது
 தெரியவந்துள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதால் புற்று நோய், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடுவது என்ற பாதிப்புகள் உள்ளதென 
தெரியவந்துள்ளது.
இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட பல வகையான பூச்சிக்கொல்லிகள் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் கிளைபோசேட், கார்போபியூரான், மோனோகுரோடாபஸ் போன்றவை பிரதான களைக்கொல்லிகளாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இரண்டு வருடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். அங்கே பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.