திங்கள், 19 செப்டம்பர், 2022

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை 
விடுத்துள்ளது.
இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளின் ஊடக கடவுச்சீட்டு வழங்கப்படும்.
முன்பதிவு செய்யாதவர்களுக்கு இன்று எவ்வித சேவைகளும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்யாதவர்களை அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என குடிவரவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.