வியாழன், 22 ஏப்ரல், 2021

முசுரம்பட்டியில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள் வெட்டு

 கிளிநொச்சி, தருமபுரம் காவல் துறை  பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில்  21.04.2021.அன்று  இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
 சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.