வியாழன், 29 ஏப்ரல், 2021

அதிரடியாக திருமலையில் 6 பிரிவுகள் முடக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன.
இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா 
தெரிவித்தார்.
உப்புவேலி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம​ சேவகர் பிரிவு
திருகோணமலை காவல் துறை  பிரிவில்- மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் 
முடக்கப்பட்டன.
சீனக்குடா காவல் துறை  பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், டயினாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு 
முடக்கப்பட்டன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.