ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நட்டில் கொழும்புதுறைமுநகரில் சட்டமொழுங்கிற்கு பொறுப்பு யார்

 கொழும்பு துறைமுகநகரில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா காவல் துறையினர்  ஈடுபடுவார்கள் என இராஜாங்க அமைச்சர் அஜித்கப்ரால் 
தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகநகரம் சீனாவின் காலனியாக காணப்படும் அங்கு சீனகாவல் துறையினரே  கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
கொழும்புதுறைமுகநகரம் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே காணப்படும் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
உத்தேச கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் துறைமுகநகரை சீனாவின் ஒரு பகுதியாக மாற்றாது என தெரிவித்துள்ள அவர் இலங்கைiயின் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுவிடமே துறைமுக நகர்மீதான கட்டுபாடு காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.