வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டின் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

நாட்டில் அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று (29)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொவிட்19 தாக்கம் மூன்றாம் கட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்றிருந்த நிலையில் ஐந்து நாட்கள் பாடசாலை முடக்கம் ஏன் மேதினத்தினை நடாத்த எடுத்த நடாடகமா இது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.