வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வத்தளை யில் 2.4 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை பகுதியில் 2.400 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை  மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல் துறை  போதைப் பொருள் பணியகத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண
 தெரிவித்துள்ளார்.
ஹேரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.