வியாழன், 22 ஏப்ரல், 2021

அநாவசியமாக 119 அவசர பிரிவை பயன்படுத்த வேண்டாம்

நாட்டில் 119 அவசர பிரிவை அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டாம் என காவல் துறை  ஊடக பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள் , அனர்த்தங்கள் மற் றும் திடீர் விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு துரிதமாகத் தெரி விக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காவல் துறை அவசர பிரிவான 119 துரித அழைப்பு சேவையைச் சிலர் அநாவசியமான முறை யில் பயன்படுத்துவதாக அஜித் ரோகண 
தெரிவித்துள்ளார் .
காவல் துறை அவசர பிரிவான 119 துரித அழைப்பு தொடர்பில் முன்னெடுக் கப்பட்ட நீண்ட ஆய்விலேயே மேற்படி தகவலானது கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மாத்திரம் குறித்த அவசர பிரிவிற்கு 1,232, 272 அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்தார் .
குறித்த புள்ளிவிபரங்களுக்கு அமைய நாளொன்றுக்கு 3000 இற்கு அதிக மான அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் , 8000 இறகும் அதிக மானோர் இத்துரித எண்ணைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றுள்ள தாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வசர பிரிவிற்கு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் 93% மான அழைப்புக்கள் தேவையற்ற விடயங்களுக்காகவே மேற்கொள்ளப் படுவதாகவும் இது அவசர பிரிவின் பணிகளுக்கு இடையூறாகவுள்ள தாகவும் அவர் மேலும்தெரிவித்தார் .
எனவே அவசர நிலைமைகளின் போது மாத்திரம் இத்துரித அவசர பிரிவு எண்ணை தொடர்புகொள்ளுமாறு பொது மக்களிடம் அஜித் ரோகண கோரிக்கை விடுத்துள்ளனர் .
காணி தகராறு , காசோலை மோசடிகள் மற்றும் பிற விடயங்கள் தொடர் பாக அவசர பிரிவான 119 துரித அழைப்பிற்கு அறிவிப்பதால் எவ்வித பய னையும் பெற்றுக்கொள்ள முடியாது என மேலும்
 தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.