புதன், 17 மார்ச், 2021

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க நேரிடலாம்..இராணுவத் தளபதி


எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
கடந்த நத்தார் காலப்பகுதியின் பின்னர் நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளது. அவ்வாறான காலப்பகுதியில் 
மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என உறுதியாகியுள்ளதென இராணுவத் தளபதி
 குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.