புதன், 31 மார்ச், 2021

புதிய முறையில் யாழில் கொள்ளை அடிக்கும் கும்பல் !மக்களே அவதானம்

அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை போல மரண வீட்டு தொலைபேசி இலக்கமும் 
வழங்கப்பட்டிருந்தது.
சம்பவ தினம் காலையில் அந்த வீட்டு தொலைபேசிக்கு ஒரு இனம் தெரியா இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. பத்திரிகையில் உறவினர்கள் பெயர் விபரங்கள் குறிப்பிட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் இன்னார் தானே இவர் உங்கள் உறவினர் தானே என்று நன்கு தெரிந்தவர் போல காட்டிக் கொண்டார் எதிர்த் தரப்பில் பேசியவர்.
அத்துடன் அந்த வீட்டில் இருந்த ஒரு ஆசிரியரிடம் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அந்த ஆசிரியரிடம் நீங்கள் இந்த பாடசாலையில் தானே கற்பிக்கின்றீர்கள் என்று நன்றாக தெரிந்தவர்கள் போல காட்டி தாம் வறிய பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்களாக சொல்லி உங்கள் பாடசாலையில் கற்கும் வசதி குறைந்த மாணவர்களின் இலக்கங்களை வழங்குமாறு
 கேட்டுக் கொண்டார்கள்.
அந்த ஆசிரியரும் தான் இப்பொழுது ஓய்வு பெற்று விட்டதால் பாடசாலை உப அதிபருடன் கதைத்து இப்படி அழைப்பெடுத்திருக்கிறார்கள் உங்கள் இலக்கத்தை குடுக்கிறேன் என்று சொல்லி இலக்கத்தை அந்த நபரிடமும் குடுத்திருக்கிறார்.
அந்த நபர் உப அதிபருடன் கதைத்து வறிய மாணவர்களின் குடும்ப விவரம் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பெற்று
 இருக்கின்றார்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.