புதன், 10 மார்ச், 2021

பிரித்தானியா.கையை விரித்தது.இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த
 நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள 
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி 13,500 இற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக 
பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே
 குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் ஸ்ரீலங்கா கையொப்பமிடவில்லை என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவினால் மாத்திரமே ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா 
தொடர்ந்தும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது 
நம்பிக்கை கொண்டுள்ளதாக 
அறிவித்துள்ளது.அதன் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான
 அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வழக்குத் தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.