வெள்ளி, 26 மார்ச், 2021

முடக்கப்பட்டது யாழ். மாநகரம்.கட்டுப்பாட்டை கையில் எடுத்தது இராணுவம்.

யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான 
இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும்,கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக 
வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார 
நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பேருந்து நிலையமும், புதிய பேருந்து நிலையம் மற்றும் பண்ணை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலையில் பேருந்து நிலையம் வழக்கம் போல இயங்கியது.  
வர்த்தக நிலையங்கள் சிலவும் திறந்தன. 
அந்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கம் போல இருந்தது.இதையடுத்து, இராணுவம் களமிறக்கப்பட்டு அந்த பகுதியில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.இதேவேளை, ஏற்கனவே புதிய பேருந்து நிலைய சர்ச்சை நிலவி வரும் நிலையில், இ.போ.சவினர் இதுவரை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லவில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.