செவ்வாய், 16 மார்ச், 2021

கொழும்பு நகரில் நள்ளிரவு வீதியில் சுற்றித் திரிந்த இளம் யுவதிகள் கைது

கொழும்பு நகரில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நான்கு யுவதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் 
ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த யுவதிகளை தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் 
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே 
அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கொழும்பு கோட்டைப் பொலிஸார் இந்த யுவதிகளை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.இதேவேளை அபராதம் செலுத்திய பின்னர், கைது செய்யப்பட்ட யுவதிகள் விடுதலை 
செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.