ஞாயிறு, 14 மார்ச், 2021

நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாது

 கிளிநொச்சி-நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் பல வருடங்களாக  சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை 
வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆறு, 66 அடி ஆழமாக இருந்துள்ளது.எனினும் தற்போது சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாக சென்றுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த ஆற்றுப்பகுதியில் பெரும்பாலான மரங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், தமது ழூதாதையர் காலம் முதல் குறித்த ஆறு இருந்து வருகிறது எனவும் அப்பிரதேச மக்கள் 
குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து  நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.