வெள்ளி, 27 நவம்பர், 2020

மாவீரர்களுக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி

இலங்கை நாடாளுமன்றில் 27-11-20. இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 27-11-20. இன்று
நாடாளுமன்றில் உரையாற்றும் போது மாவீரர்களுக்கு 
அஞ்சலி செலுத்தினார்.
“இந்த மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு இன்று நினைவு கூரப்படுகின்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“காணி அபகரிப்பு இன்று பெரும் பிரச்சினையாகியுள்ளது. இதனால் தான் அன்று ஆயுதம் ஏந்தி போராடும் நிலை உருவானது. சரணலாயஙகள் அமைக்கவென கூறி காணிகள் அபகரிக்கப்பட்டுக் 
கொண்டிருக்கின்றன.
அதேவேளை, எமது பகுதியில் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளானர். வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களுக்கு காப்புறுதி முறை உருவாக்கப்பட வேண்டும். கெடுபிடிகள் நீக்கப்பட வேண்டும்” என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> /> 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.