வியாழன், 12 நவம்பர், 2020

சீனக்குடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி 
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை 11-11-20.அன்று  திறந்த நீதிமன்றில் 
வாசித்துக்காட்டி தீர்பளித்தார் .
2012ம் ஆண்டு சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 9 வயது 
சிறுமி அருகில் உள்ள வீட்டுக்கு காற்றடிக்கும் பம் கொடுக்கச் சென்று காணாமல்போன நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த வழக்கிலேயே குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.