வெள்ளி, 27 நவம்பர், 2020

இராணுவம் முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு மிரட்டல்

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில்.27-11-20 இன்று பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை திறக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் நிர்ப்பந்திப்பதாக வர்த்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக கணிசமான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்ற இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும் அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்திவருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.