ஞாயிறு, 15 நவம்பர், 2020

லண்டன் செல்ல சென்ற யாழ் வாசிக்கு கொரோனா – 61 பேர் தனிமையில்

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன்
 நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரியாலையில் தங்கியிருந்த அவர், கடந்த 9ம் திகதி கொழும்புக்குச் சென்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைப்பதற்காக கடந்த 11ம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்த போது, கெ ரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த 15 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ
 அதிகாரியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் இந்த சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.