ஞாயிறு, 29 நவம்பர், 2020

தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, கம்பஹா சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு 
மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்
அதன்படி, இந்த நிலைமை .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படும்.கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கடலோரம் மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் ராகம 
பகுதிகளும் .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமையில் இருந்து விடுவிக்கப்படும்.மட்டக்குளி பொலிஸ் பகுதியில் உள்ள ராண்டிய உயன வீட்டுத் திட்டமும், பெர்குசன் வீதியின் தெற்குப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.வெல்லம்பிட்டி 
பொலிஸ் பகுதியில் உள்ள ரன்சந்த செவன வீட்டுத் திட்டம், சலாமுல்ல மற்றும் விஜயபுர கிராமசேவகர் பிரிவுகளை உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி
 தெரிவித்தார்.எவ்வாறாயினும், மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து அடுத்த புதன்கிழமை 
ஆராயப்படும் என்றும், அந்த பகுதிகள் விடுவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.