வெள்ளி, 27 நவம்பர், 2020

சுப்பர்மடத்தில் வீட்டு முற்றத்திலும் அஞ்சலிக்க தடை

பருத்தித்துறையில் அஞ்சலிக்க தடை; எல்லைமீறிய மனித உரிமை பறிப்பு
2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் மாவீரர்களாக உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தமது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று தடுத்துள்ளனர்.
இதனால் அவர்கள் வீட்டுக்குள் தமது பிள்ளைகள் மற்றும் மருமகனுக்கு படையல் படைத்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் பருத்தித்துறை – சுப்பர்மடத்தில்.27-11-20. இன்று மாலை 
இடம்பெற்றது.
அவர்களுடைய வீட்டுக்கு இன்று மாலை சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வீட்டின் முற்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைக் கழற்றுமாறு அறிவுறுத்தினர். அவற்றை வீட்டில் இருந்தவர்களைக் கொண்டு பொலிஸார் 
அகற்ற வைத்தனர்.
அத்துடன், வீட்டின் முன்பாக இராணுவத்தினர் கடமையில்
 ஈடுபட்டிருந்தனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.