இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கானஓய்வூதிய (ரத்து செய்தல்) சட்டமூலத்தை இம்மாதம் 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதே நாளில் நிறைவேற்ற நாடாளுமன்ற அலுவல் குழு முடிவு செய்துள்ளது.
குறித்த அறிவிப்பை அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
சட்டமூலத்தில் உள்ள எந்த விதியும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்றும், அதை நாடாளுமன்றத்தால் எளிய பெரும்பான்மையுடன் இயற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அவைத் தலைவர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.
அத்துடன் சட்டமூலம் அரசியலமைப்பின் 121(1) வது பிரிவின்படி மறுஆய்வு செய்யப்பட்டு அரசியலமைப்பு விதிகளுடன் முழுமையாக ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக