சனி, 7 பிப்ரவரி, 2026

ஓவியம் ஒன்று அமெரிக்காவில் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது

அமெரிக்காவில் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலேஞ்சலோவின் ஓவியம் ஒன்று 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. 
இது அவரின் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அதிக 
தொகை ஆகும். இந்த சிறிய பாத ஓவியம் சுமார் 5 அங்குலமே ஆனது.
மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு அரிய வரைபடத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த விலை என்கின்றனர். 
சிஸ்டீன் தேவாலயத்திற்கு மைக்கலேஞ்சலோ தீட்டிய சுமார் 50 படைப்புகளில் அதுவும் ஒன்று. 
நியூயார்க்கில் இந்த ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய 
ஆர்வலர்கள் திரண்டனர். 
45 நிமிட விறுவிறுப்பான ஏலத்திற்குப் பிறகு இந்த ஓவியம் விற்பனை ஆனது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.