ஞாயிறு, 12 ஜூன், 2022

குருந்தூர்மலை தமிழர் பகுதியில் குடிகொள்ள ஊர்வலமாக நகரும் புத்தர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் (இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்) குருந்தாசோக
 புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும்.12-06-2022. இன்று. காலை 09.00 மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ், விமானப்படை, கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.
பிரதேச தமிழ் மக்களால் வழிபடப்பட்டு வந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் 
அங்கு வழிபாட்டுக்குச் 
செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற தடைவிதிக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தொல்லியல் அகழ்வாராட்டசி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில், அங்கு பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் இராணுவத்தினால் 
அமைக்கப்பட்டு வந்தது.
அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் 
தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு 
இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை 
ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு 
குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான
 இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் 
இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
சிங்கள மக்கள் யாருமற்ற தமிழர்கள் பூர்வீக்கமாக வாழும் இந்தப் பகுதியில் முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகள், பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிகப் பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இன்றைய நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும், குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு பிரதிஷடை செய்யவுள்ள புத்தர் சிலை தற்போது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
எனவே இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை எதிர்க்க 
தமிழர் நிலங்களை குறிப்பாக ஆதிசிவன் ஐய்யனார் ஆலயத்தை காக்க அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.