ஞாயிறு, 26 ஜூன், 2022

நாட்டில் மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் கொடுத்த ‘செட்’ உரிமையாளர்

மஹரகம – தெஹிவளையில் பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தெஹிவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் அமைந்துள்ள Highway Enterprises எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இன்று பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்
 செய்யப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் எம்.டி.எஸ். பெரேரா மக்கள் படும் துன்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பெருமளவான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இங்கிரியவில் உள்ள உருகல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் இரவு பகலாக எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.மேலும், மக்களின் அசௌகரியத்தை உணர்ந்தே இந்தச் செயலை மேற்கொண்டதாக அதன் உரிமையாளர் கெலும் பிரசன்ன தெரிவித்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.