ஞாயிறு, 19 ஜூன், 2022

இலங்கையில் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல்

நாட்டில் இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து, பயணம் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.இந்த விபத்துக்களில் சைக்கிளை செலுத்திய 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் வீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நிஹால் தல்துவ அறிவுறுத்தல் 
வழங்கியுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.