வியாழன், 31 மார்ச், 2022

ஹிரணவில் தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை ஹிரண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

32 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த சகோதரியுடன் தனது தந்தை பாலியல் உறவு கொள்வதை நேரில் பார்த்ததாக இளைய சகோதரியொருவர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்த வேளை சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் மகளுக்கு எதிராக இந்தக் குற்றங்களைச் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் நேற்றிரவு (மார்ச் 27) வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்ததாக காவல்துறையினர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாணந்துறையில் தனது ஒன்பதாம் ஆண்டு பாடசாலைக் கல்வியின் போது பாடசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் மனநலம் பாதிக்கப்பட்டு பாடசாலைக் கல்வி தடைபட்டதையடுத்து பெற்றோரின் கவனிப்புக்கு மத்தியில் 
வீட்டில் தங்கியுள்ளார்.
சிறுமியின் தாயிடம் வினவியபோது தானும் இதனை உணர்ந்ததாக தெரிவித்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.