திங்கள், 21 மார்ச், 2022

வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
அரச பேருந்தொன்றினை தனியார் பேருந்தொன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி 
தடம்புரண்டுள்ளது.
குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்தவர்களை மக்கள் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.