செவ்வாய், 22 மார்ச், 2022

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய மது போத்தல்களில் மாற்றம்

 

தேசிய மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாராயம் மற்றும் பியர் மதுபான போத்தல்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க 
கூறியுள்ளார்.
ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்படுவது ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட முடியாத தேசிய மதுபான போத்தல்களில் டிஜிட்டல் அடையாளத்தை பதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.