சனி, 12 மார்ச், 2022

நாட்டில்ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம்

கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் 11-03-2022.அன்று உத்தரவிட்டுள்ளார்.
34 வயதுடைய ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை நான்கு வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தற்போது 20 வயது எனவும் குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை தனது அடையாள அட்டையை பயன்படுத்தி கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் முன்பதிவு செய்து மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில்
 தெரியவந்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு
11-03-2022.அன்று  உத்தரவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.