வெள்ளி, 18 மார்ச், 2022

நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை

எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு இன்று அதிகாலை சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் போன்று மஞ்சள் நிற கலனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 பேர் கொண்ட குழு, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடக்கும் போது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் எவ்வளவு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளை சம்பவம் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையர்களை துரிதமாக கைது செய்ய முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.