புதன், 9 ஆகஸ்ட், 2023

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கு யாழில் அதிரடி சீல்

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் 
தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால்  08-08-2023.    அன்று யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ். பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.
இரண்டு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில் வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.